முள்ளிவாய்க்காலில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் முருகன் கோவில் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 5 பேரை, முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முருகன் கோவில் வீதியில் நேற்று (25) நள்ளிரவு மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முருகன் கோவிலுக்கு பின்பாக புதையல் இருப்பதாக தெரிவித்து அதனை தோண்ட இவர்கள் முற்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டானைச் சேர்ந்த இரு இளைஞர்களும், முள்ளியவளையைச் சேர்ந்த மூன்று இளைஞர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - முல்லைக்கீதன்)

Mon, 10/26/2020 - 09:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை