பொன்சேகா மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார் சிவாஜி

பிரபாகரனின் மகன் குறித்த கருத்து

இறுதி யுத்தத்தின் போது போர்க்குற்றம் நடந்ததென்பதை ஏற்றுக்கொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவர் படையணியின் தளபதியென கூறியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்துவதற்கும் அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஒன்றிணையவேண்டுமென தெரிவித்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது,  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவர் படையணியின் தளபதி எனக்கூறியமை தொடர்பில் பதில் வழங்குவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை