ரொனால்டோவுக்கு கொரோனா பாதிப்பு

நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த கொரோனா பரிசோதனை கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.அதில் பாதிப்பு உள்ளதாக இத்தாலிய ஊடகம் தெரிவித்துள்ளது.இவர் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்னர் பிரான்ஸ் அணியுடன் ஆடிய ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கடந்த 13ம் திகதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும் ரொனால்டோவுக்கு தற்போது கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இல்லை என்றும், அவர் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் ரொனால்டோ தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக சுவீடனுக்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டிக்கான போர்த்துக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கப்பட்டார்.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை