விளையாட்டுத்துறை சம்பந்தமான படைப்புகள் அடங்கிய நூல் ஆளுநரிடம் கையளிப்பு!

சப்ரகமுவ மாகாண பாடசாலை மட்டத்திலான விளையாட்டுத்துறை சம்பந்தமான படைப்புகள் அடங்கிய நூல் ஒன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ விடம் (22) கையளிப்பட்டது.

சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் விளையாட்டுத்துறைக்கான உதவி பணிப்பாளர் உபசார அலககோன் மேற்படி சப்ரகமுவ மாகாண பாடசாலை மட்டத்திலான விளையாட்டுத்துறை சம்பந்தமான படைப்புகள் அடங்கி நூலை அண்மையில் மாகாண ஆளுநரிடம் கையளித்தார். மேற்படி நூலில் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுகள் சம்பந்தமான விபரங்களும் மற்றும் விளையாட்டுத்துறையில் சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள், மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் வெற்றி பெற்ற விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

காவத்தை தினகரன் விசேட நிருபர்

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை