நீரில் மூழ்கி பல்கலை மாணவன் பலி

பலாங்கொடை, பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்தும்பை சமன் தேவாலய ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை, தாமஹன பகுதியைச் சேர்ந்த பேராதனை பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 22 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டு, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக, பலாங்கொடை பின்னவல பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக, பலாங்கொடை, பின்னவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உயரதிகாரி சமன் தெரிவித்தார்.

(பலாங்கொடை தினகரன் நிருபர் - அப்துல் சலாம்)

Mon, 10/26/2020 - 08:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை