சட்டவிரோத செயற்பாடுகளை ஜனாதிபதி கட்டுப்படுத்த வேண்டும்

வட மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசுவமடு பகுதியில் கை வெட்டப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்து பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் கை மீண்டும் பொருத்தப்பட்ட நபர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் தலைதூக்கி காணப்படும் நிலையில் அவ்வாறானவர்களால் தான் எனக்கு இந்நிலை ஏற்பட்டது. இந்த நிலை என்னுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது. இந்த செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைவரும் செயற்பட வேண்டும்.

ஜனாதிபதியும் பிரதமரும் குறித்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். எனக்கு மறுவாழ்வு அளித்த வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கோப்பாய் நிருபர்

Tue, 10/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை