கம்பஹா மாவட்டத்தின் வியாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, திவுலபிட்டி மற்றும் மினுவாங்கொடையில் ஏற்கனவே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sun, 10/04/2020 - 21:36
from tkn