சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து ஜோகோவிச் விலகல்

பரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து முதனிலை வீரர் ஜோகோவிச் விலகுவதாக அறிவித்துள்ளார். பரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ம் திகதி முதல் 8-ம் திகதி வரை பிரான்சில் நடக்கிறது.

இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், ‘முதனிலை’ வீரருமான 33 வயதான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகியுள்ளார். அதற்கு பதிலாக 26-ம் திகதி முதல் நவம்பர் 1ம் திகதிவரை வியன்னாவில் நடக்கும் போட்டியிலும், நவம்பர் 15-ம் திகதி முதல் 22-ம் திகதி வரை லண்டனில் நடக்கும் ஏ.டி.பி. இறுதி சுற்றிலும் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை