பிராவோவுக்கு பதிலாக புதிய வீரர்

நியூஸிலாந்து சுற்றுப்பயணத்திற்காக மேற்கிந்திய தீவுகள் ரி-20 அணியில், சகலதுறை வீரரான டுவைன் பிராவோவுக்கு பதிலாக ரொமாரியோ ஷெப்பர்ட் பெயரிடப்பட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். ரி-20 தொடரில், ஒக்டோபர் 17ஆம் திகதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது டுவைன் பிராவோ காயம் அடைந்தார்.

இதனால் அவர் தொடரிலிருந்து விலகினார். தற்போது அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வெளியேறத் தயாராக உள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகமான 25 வயதான வலக்கை மித வேகப்பந்து வீச்சாளரான ரொமாரியோ செப்பர்ட், ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளையும், இரண்டு ரி-20 போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், நடப்பு கரீபியன் பிரீமியர் லீக்கின் அரையிறுதிக்கு முன்னேறிய கயானா அமேசான் வோரியர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த அவர், ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை