பதவி விலகினார் அர்ஜுன ரணதுங்க

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவரது இராஜினாமாக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ருவான் விஜேவர்தன, தனக்கு கீழ் செயற்படுவது பொருத்தமானதாக அமையாதென இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

Thu, 10/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை