விளை நிலங்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

சி.பி.ரத்னாயக்கவுடன் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கிடையில் (19) வனப் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா,

கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்த காலத்தில் விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந் தமையினால் காடுகளாக மாறியிருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களங்களினால் கையகப்படுத்தப் பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்திற்கு முன்னர் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் அரச காணிகள் மக்களுக்கு பகிர்தளிக்கப்பட்டு அவர்களினால் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், காணி உரித்தை உறுதிப்படுத்தக் கூடிய அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் புதிய வரையறைகள் காரணமாகவும் பெருமளவான பயிர் செய்கை செய்யக்கூடய விளை நிலங்களை பிரதேச விவசாயிகள் இழந்துள்ளனரெனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம், ஆனைவிழுந்தான், மலையாள புரம் போன்ற பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீக விவசாய நிலங்கள் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட் டுள்ளமையினால், அவை விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை கடற்றொழில் அமைச்சர் இச்சந்திப்பின் போது முன்வைத்தார்.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை