பொலிவியாவில் இரகசிய கல்லறைகள் கண்டுபிடிப்பு

பொலியாவில் புதைக்குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் குறித்து பொலிஸார விசாரணை நடத்தி வருகின்றனர்.

பால்கா நகரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளை கொண்ட 6 இரகசிய கல்லறைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

போதைப்பொருள் கடத்தல், அரசியல் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் காணாமல் போனவர்களுடன், இந்த எலும்புகூடுகள் ஒத்து போகிறதா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருவதாக பொதுமக்கள் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் வில்சன் சாண்டமரியா தெரிவித்துள்ளார்.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை