தென்மேல் மழை எதிர்வரும் நாட்களில் குறையும் வாய்ப்பு

தென்மேல் மழை எதிர்வரும் நாட்களில் குறையும் வாய்ப்பு-Weather-Forecast-Sri-Lanka-Oct-16-2020

- மேல், சப்ரகமுவ, மத்தி; காலி, மாத்தறையில் மழை

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Fri, 10/16/2020 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை