ரூபவாஹினி செய்தி வாசிப்பாளர் கலீலுர் ரஹ்மான் காலமானார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையின் செய்தி வாசிப்பாளரும் இலங்கை துறைமுக அதிகார சபையின் நிருவாக உத்தியோகத்தருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.சி.எம்.கலீலுர் ரஹ்மான் (வயது-50) நேற்றுமுன்தினம்(04) கொழும்பில் காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரின் ஜனாஸா சொந்த ஊரான சம்மாந்துறைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று திங்கட்கிழமை அஸர்  தொழுகையின் பின்னர் சம்மாந்துறை கல்லரிச்சல் மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

 

 

சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்

Tue, 10/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை