கம்பஹா – வியாங்கொடை இடையில் புகையிரதங்கள் நிறுத்தப்படாது

தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு பிரதான புகையிரத மார்க்கத்தில் கம்பஹாவிலிருந்து வியாங்கொடை வரையான புகையிரத நிலையங்களுக்கு இடையில் எந்தவொரு புகையிரத நிலையத்திலும் புகையிரதங்களை நிறுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், கம்பஹா புகையிரத நிலையத்தில் புகையிரதங்கள் நிறுத்தப்படும் என்பதோடு, வியாங்கொடை புகையிரத நிலையத்தில் புகையிரதங்கள் நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தாரலுவ, பெம்முல்ல, மஹலேகொட, ஹீன்தெனிய - பட்டியகொட, வியாங்கொடை புகையிரத நிலையங்களில் எந்தவொரு புகையிரதமும் நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத நிலையங்களுக்கு வருகை தரும் அனைத்து பயணிகளும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு, பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

Tue, 10/06/2020 - 14:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை