ஒன்பது மில்லியன் மக்கள் வசிக்கும் ஐரோப்பாவின் செல்வந்த நகரான லண்டனில் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கொரோனா தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி லண்டன் நகர் மிதமான அச்சுறுத்தல் நிலையில் இருந்து உயர் அச்சுறுத்தல் கொண்ட பகுதியாக மாற்றப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்கும் 3 கட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் லண்டானில் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்படி குடியிருப்பாளர்கள் மதுபானக் கடைகள் மற்றும் உணவகங்களில் ஒருவருடன் ஒருவர் கலப்பது தடுக்கப்படுகிறது.
“இதைத் தவிர வேறு தேர்வு இல்லை” என்று லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். “நாம் கடினமான குளிர்காலம் ஒன்றை எதிர்நோக்கி உள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
லண்டனில் 100,000 பேருக்கு 100 பேர் என விரைவில் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த புதன்கிழமை 19,724 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதோடு 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
from tkn