இரு குழந்தைகளை ஆற்றில் வீசிய ஈராக்கிய தாய் கைது

தனது கணவரை தண்டிப்பதற்காக இரு குழந்தைகளையும் டைக்ரிஸ் நதியில் வீசி எரிந்த ஈராக் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் மூன்று வயது மகன் மற்றும் இரண்டு வயது மகள் நதியில் மூழ்கியதாக நம்பப்படுவதோடு அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் பாதுகாப்பு கெமராவில் பதிவாகி இருப்பதோடு அது சமூக ஊடகத்தில் பரவி ஈராக்கியர் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த செப்டெம்பரில் தனது கணவர் விவாகரத்து செய்ததற்கு பழிவாங்கும் வகையிலேயே அவர் குழந்தைகளைக் கொன்றிருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். தலைநகர் பக்தாதின் வடக்காக இருக்கும் அல் அயிமா பாலத்தில் இருந்தே அந்தத் தாய் குழந்தைகளை வீசி எறிந்திருப்பதோடு அங்கு தந்தை கதறி அழும் வீடியோ ஒன்றும் சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை