பிரதமர் மஹிந்த தலைமையில் அலரி மாளிகையில் இன்று விசேட நவராத்திரி பூசை

நவராத்திரி பூசை கொண்டாட்டங்களில் நான்காவது நாளான இன்று 20 அலரி மாளிகையில் விசேட கொலுவைத்து பூசை வழிபாடுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ் வைபவத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமை தாங்குவார். மத விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சராக இருக்கின்ற மஹிந்த ராஜபக்‌ஷ சகல சமயங்களையும் சமத்துவமாக வழிநடத்தும் வகையில் இந்த பூசை ஏற்பாடுகளை செய்துள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் இக்காலகட்டத்தில் இந்த நவராத்திரி பூஜையை கடந்த காலங்களில் நடத்தியது போல் விமரிசையாக நடத்தாமல் சமய அனுஷ்டானங்களை கருத்திற்கொண்டு நடத்துவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதற்கமைய மிகவும் முக்கியமான சிலருடன் சிவாச்சாரியார்கள் சகிதம் இந்த பூசை வழிபாடுகள் இன்று (20) மாலை அலரி மாளிகையில் நடைபெறும்.

 

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை