மார்ஷல் தீவில் முதல்முறை கொரோனா சம்பவம் பதிவு

உலகில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாத நாடாக இருந்த மார்ஷல் தீவில் முதலாவது நோய்த்தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் ஹவாயிக்கு அருகே, மார்ஷல் தீவு அமைந்துள்ளது. குவாஜலின் அட்டோல் என்னுமிடத்தில் அமெரிக்கப் படையினர் தங்குமிடத்தில் பணிபுரியும் இருவரிடம் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் ஹவாயி தீவில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை மார்ஷல் தீவிற்குச் சென்றவர்களாவர். பாதிக்கப்பட்ட இருவரும் சமூக அளவில் யாருடனும் தொடர்புபடவில்லை.

உலகில் வைரஸ் தொற்று ஆரம்பித்ததில் இருந்து மார்ஷல் தீவு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டது. போதுமான சுகாதாரக் கட்டமைப்பு இல்லாத

மார்ஷல் தீவு வரும் நாட்களில் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

கிரிபாட்டி, மைக்ரோனேசியா, நவ்ரு, சமோவா, வனவாட்டு போன்ற சில தீவு நாடுகளில் மட்டும்தான் இன்னும் கொவிட்–19 நோய் பரவவில்லை.  

Fri, 10/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை