குடும்பத்தினர் ஐவரை கொன்ற தாய், மகள்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தாய் மற்றும் மகள் தமது உறவினர்கள் ஐவரை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

47 வயதான ஷானா டிக்ரீ மற்றும் அவரது மகளான 21 வயதான டொமினிக் டிக்ரீ குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் மரண தண்டனையில் இருந்து தப்பியதாக மாவட்ட சட்டமா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஷானாவின் இரு குழுந்தைகள், அவரது சகோதரி, 9 வயது இரட்டை சகோதரிகளே கொல்லப்பட்டவர்களாவர். இவர்களின் சடலங்கள் கடந்த ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை