லெவன் பவர் அணி சம்பியன்

மூதூர் கிரிக்கட் வாரியத்தினால் நடாத்தப்பட்டு வந்த ரி /10 தொடரின் இறுதிப் போட்டியில் லெவன் பவர் அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி மூதூர் கிரிக்கெட் சபையினால் அதன் தலைவர் எம்.நாஜின் தலைமையில் நடாத்தப்பட்டு வந்த ரி /10 கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி மூதூர் பொது மைதானத்தில் 2020.09.18 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்று முடிந்தது. இத் தொடரில் 22 கழகங்கள் பங்குகொண்டனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய றியழ் இஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ஓட்டங்களை பெற்றது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லெவன் பவர் அணியினர் 5 ஓவர்களில் 68 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிப் போட்டியில் மூதூர் லெவன் பவர் மற்றும் றியல் இஸ்டார் அணிகள் களம் இறங்கின. இறுதிப் போட்டியின் சம்பியனாக மூதூர் லெவன் பவர் அணி தெரிவு செய்யப்பட்டது.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை