கிண்ணியா யங் ஹீரோஸ் அணி சம்பியன்

கிண்ணியா யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் யங் ஹீரோஸ் அணி கைப்பற்றி 2020 ஆம் ஆண்டுக்கான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பத்து ஓவர் கொண்ட மென் பந்து போட்டியான இந்தச் சுற்றில் கிண்ணியா பிரதேசத்தில் இருந்து எட்டு அணிகள் பங்குபற்றின.

இந்தச் சுற்றின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிறு (18) கிண்ணியா அல் அதான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் யங் ஹீரோஸ் அணியும் சில்வர் ஸ்டார் அணியும் களம் இறங்கின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சில்வர் ஸ்டார் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யங் ஹீரோஸ் அணி 8 ஓவர் முடிவில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 95 ஓட்டங்களை பெற்று 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று 10வது அரசாங்க அதிபர் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.

இறுதிப் போட்டி நிகழ்வில் அல் அதான் மகாவித்தியாலய அதிபர் எம்.எஸ்.அஸீஸ், சமாதான நீதவான் ஏ.எஸ்.எம். அனீஸ் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.ஏ.றியாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு பணப் பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தனர்.

கிண்ணியா மத்திய நிருபர்

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை