புலமைப்பரிசில், A/L பரீட்சைகள் தொடர்பில் அறிவிப்பு

இம்மாதம் இடம்பெறுவதற்கு இருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் குறித்த பரீட்சைகளை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பரீட்சைகளுக்கான திகதிகளை மாற்றம் செய்வது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் இல்லை எனவும், அவர் தெரிவித்தார்.

Mon, 10/05/2020 - 14:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை