கம்பஹா பொலிஸ் பிரிவில் மாலை 6 மணி முதல் ஊரடங்கு

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (06) மாலை 6.00 மணிக்கு அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போது திவுலபிட்டி, மினுவாங்கொடை, வியாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tue, 10/06/2020 - 13:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை