பேலியகொடை மத்திய மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா

நேற்று முதல் உடனடியாக மூடப்பட்டது

கொழும்பு, பேலியகொடை பொது மீன் சந்தையில் 49 மீன் வியாபாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னரே இவர்கள் 49 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியாகொடை மீன் சந்தையில் 105 மீன் வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே 46 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Thu, 10/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை