ஆர்மேனியா – அசர்பையானுக்கு இடையே 3ஆவது போர் நிறுத்தம்

சர்ச்சைக்குரிய நகொர்னோ கரபக் பிராந்தியத்தில் ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் புதிய போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தீவிர பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை நேற்று அமுலுக்கு வந்தது.

இதற்கு முன்னர் இந்த மாத ஆரம்பத்தில் எட்டப்பட்ட இரு போர் நிறுத்த உடன்படிக்கைகள் அமுலுக்கு வந்த விரைவிலேயே முறிந்தன. அந்த மலைப்பிராந்தியத்தில் கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதியே மோதல் ஆரம்பித்தது. இது அண்மைய தினங்களில் தீவிரம் அடைந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று அமெரிக்கா, ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, திங்கட்கிழமை மனிதாபிமான போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவித்தது.

Tue, 10/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை