சென்னையை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சென்னை அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் ரோயல் செலன்சர்ஸ் அணி வெற்றிபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலன்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டுபாயில் நடைபெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் ரோயல் செலன்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதிகபட்சமாக அணித் தலைவர் விராட் கோஹ்லி 90 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து 169 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்க துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன் மூலம் சென்னை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

 

Mon, 10/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை