கல்முனையில் 32 பேர் சுய தனிமைப்படுத்தல்

டொக்டர் சுகுணன் தெரிவிப்பு

கல்முனையில் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுத் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுப் போக்குவரத்துகளில் பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகள் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மீறும் பட்சத்தில் பஸ்களின் சாரதிகள், நடத்துநர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் கை கழுவுவதோடு கட்டயாம் சமூக இடைவெளியை பேணுமாறு கேட்டுள்ளார்.

காரைதீவு குறூப் நிருபர்

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை