ஊழல், பண மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதி அஹமது அதீப்புக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவராக இருந்த அதீப், அவரை படுகொலை செய்ய முயன்றதாக 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் கடந்த திங்களன்று அளித்த தீர்ப்பில் அதீப்புக்கு இரண்டு மில்லியன் ரூபியா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Wed, 10/07/2020 - 06:00
from tkn