2020 சிநேக பூர்வ கிரிக்கெட் ; மட்டு. பாட்டாளிபுர மைதானத்தில் சமர்

மட்டக்களப்பு பாட்டாளிபுர மைதானத்தில் 2020 சிநேக பூர்வ கிரிக்கெட் சமரின் இறுதிப் போட்டியில் அமிர்தகழி கிற்றர்ஸ் விளையாட்டுக் கழகமும், அமிர்தகழி விறாஸ்ஸஸ் விளையாட்டுக் கழகமும் மோதியதில் அமிர்தகழி கிற்றர்ஸ் வியாட்டுக் கழகம் இரண்டு ஓட்டங்களால் வெற்றியீட்டிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.

போட்டில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். சிறந்த துடுப்பாட்ட வீரனாக கிற்றர்ஸ் விளையாட்டுக் கழக வீரர் முகுந்தனும்,சிறந்த பந்து வீச்சாளராக ஆர். ரமணனும், ஆட்ட நாயகனாக விறாஸ்ஸஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எஸ். புஸ்பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

புளியந்தீவு குறூப் நிருபர்

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை