1987 அரந்தலாவை பிக்குகள் படுகொலையை விசாரிக்க உத்தரவு

IGPக்கு சட்ட மாஅதிபர் அறிவுறுத்தல்

1987 ஆம் ஆண்டு அரந்தலாவையில் இடம்பெற்ற பிக்குகளின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் டப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை – அரந்தலாவையில் 1987 ஆம் ஆண்டு பஸ்சில் பயணித்த 37 பிக்குகளின் படுகொலை விடுதலை புலிகளினால் நிகழ்த்தப்பட்டதெனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்று 33 வருடங்களாகின்றது. இதன்படி இப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறவும் குற்றப்புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி) விசாரணை ஆரம்பித்து இரு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை