15 வயது சிறுவனுக்கு ‘அருளாளர்’ அந்தஸ்து

இணையதளத்தில் நம்பிக்கையை பரப்பிய குறுகிய காலம் வாழ்ந்த இத்தாலி சிறுவனுக்கு கத்தோலிக்க திருச்சபை அருளாளர் பட்டத்தை வழங்கியுள்ளது.

2006 ஆம் ஆண்டு இரத்தப் புற்றுநோயால் தனது 15 வயதில் மரணித்த கார்லோ அகுடிஸ் என்ற அந்த சிறுவன், மற்றொரு சிறுவனின் உயிரை அற்புதமான முறையில் காப்பாற்றியதாக வாத்திக்கான் அறிவித்தது.

2013 ஆம் ஆண்டில் சுவனத்தில் இருந்து அவர் அரிதான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரேசில் சிறுவன் ஒருவனை குணப்படுத்தியதாக வத்திக்கான் அங்கீகரித்தது. இந்நிலையில் தமது சொந்த ஊரான அசிசியில் அந்த சிறுவனுக்கு அருளாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சிறுவனுக்கு புனிதர் அந்தஸ்து வழங்கப்படுவதற்கு அவர் மற்றொரு அற்புதத்தை நிகழ்த்தியதாக உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.

Mon, 10/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை