சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ஓட்டங்களினால் வெற்றி

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 43 ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரவு நேர போட்டியின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

பிளேஒப் வாய்ப்பை தக்கவைத்து கொள்ளும் போட்டி என்பதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்ய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது.

அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நிர்ண யி க்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக நிகலஸ் பூரன் ஆட்டமிழக்க 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க பந்து வீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரஷீத் கான், ஜேசன் ஹோல்டர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை அடுத்து 127 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 12 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை