MT New Diamond மாலுமியிடமிருந்து வாக்குமூலம் பதிவு

MT New Diamond கப்பலின் மாலுமியிடமிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

காலியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து குறித்த மாலுமியிடம் நேற்று (12) குற்றப்புலனாய்வு வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் ஊடாக பெறப்பட்ட உண்மைகளை கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் நாளை (14)  சமர்ப்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

குறித்த கப்பலின் மாலுமி உட்பட, கப்பல் பணியாளர்கள் 22 பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

Sun, 09/13/2020 - 16:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை