ஹைட்ரஜன் விமானங்களை உருவாக்க ஏர்பஸ் திட்டம்

கரியமில வாயு வெளியேற்றம் அறவே இல்லாமல் ஹைட்ரஜன் வாயுவைக் கொண்டு இயங்கும் புதிய விமானங்கள் பற்றி ஏர்பஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

2035ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் அறவே இல்லாத அத்தகைய வர்த்தக விமானத்தைச் சேவையில் இணைப்பது ஏர்பஸ்ஸின் திட்டமாகும். வழக்கமான விமானங்களைப் போலன்றி திரவநிலையில் சேமிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்திப் புதிய விமான இயந்திரம் இயங்கும்.

ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மூலம் ரொக்கெட்டுகள் செலுத்தப்பட்டு வருவதால் விமானப் பயணத்தில் அது சாத்தியமாகும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஹைட்ரஜன் பாதுகாப்பானது அல்ல என்ற கவலைகளை அந்த நிறுவனம் நிராகரித்தது. புதிய எரிசக்தி உட்கட்டமைப்பில் பெரிய அளவிலான முதலீட்டுக்கு ஏர்பஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் வாயு புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலம் தயாரிக்கப்படுகிறது. மின்பகுப்பு முறையைப் பயன்படுத்தி தண்ணீரிலிருந்து அது பிரித்தெடுக்கப்படும்.

தற்போதைய நிலவரப்படி அதற்கு ஆகும் செலவு மிக அதிகமாக உள்ளது.

Wed, 09/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை