புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களுடன் பிரதமர் மஹிந்த நேற்று சந்தித்துரையாடல்

அலரி மாளிகைக்கு அழைத்து பாராட்டும் தெரிவிப்பு

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நேரில் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் கனடாவிலுள்ள முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் இராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய இந்த இரண்டு முதலீட்டாளர்களும் வடக்கு - கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்வாங்கியதற்காக பிரதமர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார். தற்போது நாட்டிலுள்ள சூழ்நிலையில் வடக்கு - கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்குள்ள மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது உறுதியளித்தார்.

Sat, 09/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை