பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் (09) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்தார்.
இச்சந்திப்பில் யாழ். மாவட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விவசாய அறிவியல் தொடர்பாகவும், யாழ்.மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதார, கால்வாய் வசதிகள் பற்றியும், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாகவும், யாழ். மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள், கல்வி மற்றும் யாழ். நகரில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலா சார மையத்தின் கட்டுமானம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு அங்கஜன் இராமநாதன் நினைவுபரிசொன்றும் வழங்கினார்.
இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப்பும் ஏனைய தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பருத்தித்துறை விசேட நிருபர்
from tkn