உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன்

அமைச்சர் விமலுடனான சந்திப்பில் பேராயர் தெரிவிப்பு

நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொறுத்தமான வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்டும் என்று பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச,பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே போராயர் இவ்வாறு தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி நடைபெற்றுவரும் விசாரணைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக பேராயர் இச்சந்திப்பில் தெரிவித்ததாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச கூறினார்.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை