சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் பலி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்சிக் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ முயன்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக,  மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பண்டார தெரிவித்தார்.

26 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான  சுப்பிரமணியம் அமிலசந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்றிரவு (12)  சுமார் 9.00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மாணிக்கக்கல் அகழ்வதற்காக வெட்டிய குழியில் மண்திட்டு சரிந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக,  மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் - செ.தி.பெருமாள்)
 
Sun, 09/13/2020 - 15:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை