டுபாயிலிருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பு

நுவரெலியா சுற்றுலா விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஜா எல- கொட்டுகொட பிரதேசத்தில் வசித்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 31ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். காலில் ஏற்பட்டிருந்த காயம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றின் காரணமாக இவர் கடந்த 2 ஆம் திகதி நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இவருடைய இறுதிக்கிரியை நேற்று காலை நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா தினகரன் நிருபர்

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை