அபுதாபி உணவக வெடிப்பில் இலங்கையர் பலி; ஒருவர் காயம்

எரிவாயு குழாயில் கோளாறு காரணமாம்

அபுதாபியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அபுதாபியிலுள்ள இலங்கை தூதரம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அபுதாபியிலுள்ள உணவகமொன்றில் கடந்த 31ஆம் திகதி இவ் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமையல் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த வெடிப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் இச் சம்பவத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாகவும் அபுதாபி செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அபுதாபியிலுள்ள உணவகமொன்றில் திங்கட்கிழமை இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன், அதன் விளைவாக இரண்டு இலங்கையர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்தன.

இத் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, உறுதிப்படுத்துவதற்காக இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விஜயம் செய்திருந்ததுடன், இரு இலங்கையர்கள்களில் ஒருவர் மரணமடைந்திருந்ததையும் மற்றைய நபர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேவையான உதவிகளை வழங்கும் முகமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்ட அமுலாக்கல் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடன் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியன தொடர்புகளைப் பேணி வருகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை