தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற மாட்டேன்

விமலுக்கு தேசப்பிரிய பதில்

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற மாட்டேனென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லதென அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பே ஓய்வு பெற திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக மாகாண சபை தேர்தல் முடியும் வரை பதவியில் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லது, என அமைச்சர் விமல் வீரவன்ச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கு போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை