எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய பணிப்பு

கிழக்கு கடலில் எரிந்த கப்பலால் சந்தேகம்;

துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ்

கல்முனை கடற் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கல்முனை கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான எண்ணெய் படிமங்கள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் அவதானிக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதை நிறுத்தியிருந்தனர். குறித்த விடயம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையிலான அதிகாரிகளுடன் சனிக்கிழமை (05) அவசர கலந்துரையாடலை நடத்திய அமைச்சர், கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 09/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை