ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழு 2019 செப்டம்பர் 20ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடையவிருந்தது.இந்த நிலையிலேயே ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை