அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் கழகங்களுக்கிடையிலான கால்பந்து சுற்றுப் போட்டியில், அட்டாளைச்சேனை ஷர்க்கி இளைஞர் கழக அணியினர் 2:1 என்ற கோல் கணக்கில் பாலமுனை இளைஞர் கழக அணியினரை வெற்றி கொண்டனர். அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற,இச்சுற்றுப் போட்டியை அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் றியாத் பதுறுதீன் ஏற்பாடு செய்திருந்தார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவசார அமைச்சின் கீழுள்ள, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள 32வது தேசியமட்ட விளையாட்டு விழாவை முன்னிட்டு இப்போட்டி நடாத்தப்பட்டது.
கால் இறுதிப் போட்டி, அட்டாளைச்சேனை ஷர்க்கி இளைஞர் கழக அணிக்கும் அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் கழக அணிக்குமிடையில் நடைபெற்றது.
இப்போட்டியில் 3:0 என்ற கோல் கணக்கில் அட்டாளைச்சேனை ஷர்க்கி இளைஞர் கழக அணி வெற்றியீட்டியது.
மார்க்ஸ்மன் இளைஞர் கழக அணியை அரையிறுதிப் போட்டியில் எதிர் கொண்ட அட்டாளைச்சேனை ஷர்க்கி இளைஞர் கழக அணி 3:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக கால்பந்து சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அட்டாளைச்சேனை ஷர்க்கி இளைஞர் கழக அணியினர், அம்பாறை மாவட்ட இளைஞர் கழக கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை மத்திய நிருபர்
from tkn