கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 300 மதன லேகியங்களுடன் நபர் ஒருவரை நேற்றுமுன்தினம் (14) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய்,ரஜஎல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் வீட்டில் மறைமுகமாக போதை தரக்கூடிய மதன லேகியங்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலுக்கமைய 300 லேகியங்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் தினகரன் நிருபர்
Wed, 09/16/2020 - 06:00
from tkn