கிளிநொச்சியில் நேற்று இளைஞன் பரிதாப பலி

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ேநற்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி புகையிரதம் ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் சென்றபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி மலயாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலத்தை புகையிரத ஊழியர்கள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை