கண்டி – பூவெலிக்கட பகுதியில் 05 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – பூவெலிக்கட பகுதியின் சங்கமித்த வீதியிலிருந்த 05 மாடிக் கட்டடம் ஒன்று கடந்த 20 ஆம் திகதி அதிகாலை வீடொன்றின் மீது இடிந்து விழுந்திருந்தது.இச் சம்பவத்தில் ஒன்றரை மாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெக்கே நேற்றுக காலை கைது செய்யப்பட்டதோடு, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
Wed, 09/30/2020 - 06:00
from tkn