கரப்பந்தாட்ட நடுவர்களுக்கான தரப்படுத்தல் சான்றிதழ் வழங்கும் வைபவம்

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட நடுவர்களின்  தரப்படுத்தலுக்கான  தகுதி காண்  போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தர உயர்வு பெற்ற 66நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்  கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி தேசிய விளையாட்டு நிறுவனத்தில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது.

இதன் அடிப்படையில் "சீ" தரத்தில் இருந்து "பீ" தரத்துக்கு சித்தியடைந்த  நடுவர்கள் 32 பேருக்கும்  "பீ" தரத்தில் இருந்து "ஏ" தரத்துக்கு சித்தியடைந்த நடுவர்கள் 34 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இவ் வைபவத்தில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  அனில் எதிரிசூரிய  மற்றும் கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எஸ். நாலக்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

களுத்துறை சுழற்சி நிருபர்

Mon, 09/07/2020 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை