மென்பந்து சுற்றுப் போட்டி: விநாயகபுரம் விநாயகர் அணி சம்பியன்

அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய வருடாந்த சரவனை கந்தையா ஞாபகார்த்த மென்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் விநாயகர் அணி சம்பியனாக வெற்றி பெற்றுக் கொண்டனர்.

இவ் வருடாந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 32 கழகங்கள் கலந்து கொண்டு இருந்ததுடன் இறுதிச் சுற்றுக்கு தம்பிலுவில் றேஞ்சர்ஸ் அணியும் விநாயகபுரம் விநாயகர் அணியும் மோதிக் கொண்டு இருந்தன.

இவ் இறுதிச் சுற்றுப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தம்பிலுவில் றேஞ்சர்ஸ் அணி முதலில் விநாயகர் கழகத்தினை துடுப்பெடுத்தாட கேட்டுக் கொண்டதற்கு அமைவாக விநாயகர் அணி 10 ஓவர் முடிவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு இருந்தன.

இதனைத் தொடர்ந்து தம்பிலுவில் றேஞ்சர்ஸ் அணியினர் 84 என்ற வெற்றி இலக்கை கொண்டு விநாயகபுரம் விநாயகர் அணியை எதிர் கொண்ட போது தம்பிலுவில் றேஞ்சர்ஸ் அணியினர் 10 ஓவர் முடிவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் விநாயகபுரம் விநாயகர் அணி இச்சுற்றில் 37 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று சரவனை கந்தையா வெற்றிக் கிண்ணத்தையும் 30 ஆயிரம் ரூபா பணப் பரிசினையும் தட்டிச் சென்றதுடன் தம்பிலுவில் றேஞ்சர்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 15ஆயிரம ரூபா பணமும் வழங்கப்பட்டு இருந்தன.

(திருக்கோவில் தினகரன் நிருபர்)

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை